இலங்கையின் 73 வது சுதந்திர தினத்தை ஒட்டி 04-02-2021 அன்று தாறுல் ஹுதாவில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்நிகழ்வில் கல்லூரியின் பணிப்பாளர், கலாநிதி எம்.எல்.முபாறக் மதனி அவர்கள் மாணவிகளுக்கு நாட்டுப் பற்று, மற்றும் சகவாழ்வு போன்றவற்றின் அவசியத்தை வலியுறுத்தினார்கள்.
அத்தோடு, இலங்கையின் சுதந்திரத்திற்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்பு எனும் தொணியில் ஒரு காணொளியும் காண்பிக்கப்பட்டது, கோவிட் 19 சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இந்நிகழ்வு நடாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.