நிரந்தர விரிவுரையாளராக நியமனம்

அஷ்ஷெய்க் ஏ.சீ.தஸ்தீக் ஹாமி, மதனி, M.A அவர்கள் தாருல் ஹுதா அறபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியில் இன்று முதல் (23.06.2024) நிரந்தர விரிவுரையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நியமனத்தை கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாறக் மதனி Ph.D அவர்கள் வழங்கிவைத்தார்கள். இந்நியமனத்தையிட்டு கல்லூரி நிருவாகம் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.

கல்லூரி அனுமதிக்கான பரீட்சை -2024/25

மேற்படி பரீட்சை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 01/06/2004 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு கல்லூரியில் இடம்பெறும். விண்ணப்பதாரிகளுக்கான அனுமதி அட்டைகள் தபால்மூலம் அனுப்பிவைக்க்பட்டுள்ளன. அனுமதி அட்டைகள் 30.05.2024 ற்கு முன்னர் கிடைக்கப் பெறாவிடின் 0774258515 எனும் இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

பழைய மாணவிகள் சங்கத்தின் மூன்றாவது பொதுக்கூட்டமும் இப்தார் நிகழ்வும்

3rd Alumni AGM

தாருல் ஹுதா அரபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கத்தின் மூன்றாவது பொதுக்கூட்டமும் இப்தார் நிகழ்வும் 31. 3. 2024 ஞாயிற்றுக்கிழமை கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கல்லூரியின் ஸ்தாபகரும் பணிப்பாளருமாகிய கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல். முபாரக் மதனி அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். இரண்டு கட்டங்களாக இடம்பெற்ற இந்நிகழ்வின் இரண்டாம் பகுதியில் அடுத்த மூன்று வருடத்திற்கான புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது. புதிய நிர்வாகத்தின் தலைவியாக கல்லூரியின் முதல் தொகுதி […]

மருதமுனை இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா

மருதமுனை தாறுல் ஹுதா அரபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் சுல்லூரியின் இரண்டாவது பட்ட மளிப்பு விழா கல்லூரி நிறைவேற் றுக் குழுத் தலைவர் வைத்திய சுலாநிதி டாக்டர் ஏ.ஆர்.எம். ஹாரிஸ் தலைமையில் இடம்பெற்றது.பணிப்பாளர் கல்லூரியின் கலாநிதி எம்.எல்.முபாறக் மதனி பட்டங்களை வழங்கி வைத்தார். சனி, ஞாயிறு (28,29) ஆகிய தினங் களில் இரு அமர்வுகளாக இடம் பெற்ற நிகழ்வுகளில் மௌலவியா நூறுல் ஐன் இஸ்மாயில், ஓய்வு நிலை ஆசிரியை திருமதி முனவ் வறா இஸ்மாயில் ஆகியோர் பிரதம […]

தாறுல் ஹுதாவில் 73வது சுதந்திர தின நிகழ்வு

இலங்கையின் 73 வது சுதந்திர தினத்தை ஒட்டி 04-02-2021 அன்று தாறுல் ஹுதாவில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்நிகழ்வில் கல்லூரியின் பணிப்பாளர், கலாநிதி எம்.எல்.முபாறக் மதனி அவர்கள் மாணவிகளுக்கு நாட்டுப் பற்று, மற்றும் சகவாழ்வு போன்றவற்றின் அவசியத்தை வலியுறுத்தினார்கள்.அத்தோடு, இலங்கையின் சுதந்திரத்திற்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்பு எனும் தொணியில் ஒரு காணொளியும் காண்பிக்கப்பட்டது, கோவிட் 19 சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இந்நிகழ்வு நடாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.